எழுத்துகளின்
பிறப்பு
உயிரின்
முயற்சியால் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து,
மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல்,
மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவெறு ஒலிகளாகத்
தோன்றுகின்றன.
எழுத்துகளின்
பிறப்பினை இடப்பிறப்பு,
முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிப்பர்.
எழுத்துகளின் இடப்பிறப்பு :
உயிர் எழுத்துகள்
|
எழுத்துக்கள் |
பிறக்கும் முறை |
|
அ, ஆ |
வாயைத் திறந்து ஒலிப்பதால் உண்டாகிறது |
|
இ, ஈ, எ, ஏ, ஐ |
வாயைத் திறப்பதோடு மேல் வாய்ப்பல்லை நா விளிம்பு
தொடுவதால் உண்டாகிறது |
|
உ, ஊ, ஒ, ஓ, ஒள |
உதடுகளைக் குவித்து ஒலிப்பதால் |
மெய் எழுத்துகள்
|
எழுத்துக்கள் |
பிறக்கும்
முறை |
|
க், ங் |
நாவின்
முதற்பகுதி அண்ணத்தைத் தொடுவதால் |
|
ச், ஞ் |
நடு
நா நடு அண்ணத்தைத் தொடுவதால் |
|
ட், ண் |
நாவின்
நுனி அண்ணத்தைத் தொடுவதால் |
|
த், ந் |
மேல்வாய்
பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதனால் |
|
ப், ம் |
மேல்
உதடும், கீழ் உதடும் பொருந்தும் போது உண்டாகிறது |
|
ய் |
நாவின்
அடிப்பகுதி மேல்வாயின் அடிப்பகுதியை பொருந்துவதனால் உண்டாகிறது |
|
ர், ழ் |
மேல்வாயை
நாக்கின் நுனி தடவுவதனால் |
|
ல் |
மேல்வாய்
பல்லின் அடியை, நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதனால் |
|
ள் |
மேல்வாயை
நாக்கின் ஓரங்கள் தடித்து தடவுவதனால் |
|
வ் |
மேல்வாய்
பல்லை கீழ்உதடு பொருந்துவதனால் |
|
ற், ன் |
மேல்வாயை
நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதனால் |
மாத்திரை
எழுத்துகளை
ஒலிப்பதற்கு ஆகும் காலஅளவைக் குறிப்பது மாத்திரை ஆகும்.
ஒரு
மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒரு முறை நொடிக்கவோ ஆகும் கால அளவாகும்.
|
வகை |
மாத்திரை அளவு |
|
உயிர் குறில் |
1 மாத்திரை |
|
உயிர் நெடில் |
2 மாத்திரை |
|
உயிர்மெய் குறில் |
1 மாத்திரை |
|
உயிர்மெய் நெடில் |
2 மாத்திரை |
|
மெய்யெழுத்துக்கள் |
½ மாத்திரை |
|
ஆய்த எழுத்து (இதுவும்
மெய்யெழுத்தாகவே கொள்ளப்படும்) |
½ மாத்திரை |
அளபெடை – என்றால்
தனக்குரிய மாத்திரையில் இருந்து நீண்டு ஒலிப்பது
குறுக்கம் – தன் மாத்திரை
அளவில் இருந்து குறைந்து ஒலிப்பது
.png)