ஒருமை,
பன்மை
1.
'அல்ல', 'அன்று' பயன்பாடு
இக்காலத் தமிழில் 'அல்ல' என்ற சொல்லை ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாகப்
பயன்படுத்துகிறோம். ஆனால், இலக்கணப்படி இது தவறு.
- 'அல்ல' என்பது அஃறிணைப்
பன்மையை
(Plural) குறிக்கும்.
- 'அன்று' என்பது அஃறிணை ஒருமையை (Singular) குறிக்கும்.
- உயர்திணைக்கு
பால் அறிந்து சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
|
பிழை (தவறு) |
திருத்தம் (சரி) |
விளக்கம் |
|
அது
செடி அல்ல |
அது
செடி அன்று |
(ஒருமை) |
|
அவன்
நல்லவன் அல்ல |
அவன்
நல்லவன் அல்லன் |
(ஆண்பால்) |
|
அவள் சிறியாள்
அல்ல |
அவள் சிறியாள்
அல்லள் |
(பெண்பால்) |
|
நான்
கற்றவன் அல்ல |
நான்
கற்றவன் அல்லேன் |
(தன்மை ஒருமை) |
|
அவர்
தமிழர் அல்ல |
அவர்
தமிழர் அல்லர் |
(பலர்பால்) |
|
நாங்கள்
ஏழைகள் அல்ல |
நாங்கள்
ஏழைகள் அல்லோம் |
(தன்மை பன்மை) |
|
நீ
எனக்கு நண்பன் அல்ல |
நீ
எனக்கு நண்பன் அல்லை |
(முன்னிலை ஒருமை) |
2. தான், தாம், தன்,
தம் – பயன்பாடு
-
தான்,
தன்:
ஒருமைக்கு மட்டும்
பயன்படுத்த வேண்டும்.
-
தாம்,
தம்:
பன்மைக்கு அல்லது
உயர்வுக்குப் பயன்படுத்த வேண்டும்.
|
பிழை |
திருத்தம் |
|
இவர்தான்
என் நண்பர் |
இவர்தாம் என்
நண்பர் |
|
இவைதான்
சிறந்தவை |
இவைதாம் சிறந்தவை |
|
கண்ணன்
தம் வேலையைச் செய்தான் |
கண்ணன்
தன் வேலையைச் செய்தான் |
|
பறவைகள்
தன் இரையைத் தானே தேடிக் கொள்ளும் |
பறவைகள்
தம் இரையைத் தாமே தேடிக் கொள்ளும் |
3. எதிர்மறை வினைமுற்று (அஃறிணை)
எதிர்மறை வாக்கியங்களில் ஒன்றன்பால் மற்றும் பலவின்பால் விகுதிகளைச்
சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
- 'து' விகுதி - ஒன்றன்பால் (ஒருமை)
- 'ஆ' விகுதி - பலவின்பால் (பன்மை)
|
பிழை |
திருத்தம் |
|
இன்று
வண்டிகள் ஓடாது |
இன்று
வண்டிகள் ஓடா |
|
ஆடுகள்
பயிரை மேயாது |
ஆடுகள்
பயிரை மேயா |
|
மலர்கள்
வாடாது |
மலர்கள்
வாடா |
|
புலிகள்
புல்லைத் தின்னாது |
புலிகள்
புல்லைத் தின்னா |
|
மான்கள்
நில்லாது |
மான்கள்
நில்லா |
|
மாடுகள்
துள்ளாது |
மாடுகள்
துள்ளா |
4. உடன்பாட்டுப் பன்மை (வினைமுற்று)
அஃறிணையில் எழுவாய்
பன்மையாக இருந்தால், வினைமுற்றும்
பன்மையாக ('ன' விகுதி பெற்று) இருக்க
வேண்டும்.
|
பிழை |
திருத்தம் |
|
பூக்கள் பூத்தது |
பூக்கள் பூத்தன |
|
மாடுகள் வந்தது |
மாடுகள் வந்தன |
|
மீன்கள் துள்ளுகின்றது |
மீன்கள் துள்ளுகின்றன |
|
அணைகள் நிரம்பியது |
அணைகள் நிரம்பின |
5. திணை
மற்றும் எழுவாய் - பயனிலை பொருத்தம்
எழுவாய் உயர்திணையாக இருந்தால், பயனிலையும் உயர்திணையாக இருக்க வேண்டும். அஃறிணைச்
சொற்களைப் (வருவது, சொன்னது) பயன்படுத்தக் கூடாது.
- பிழை:
அங்கே வருவது யாரோ?
- திருத்தம்:
அங்கே
வருபவர்
(அ)
வருபவன்
(அ)
வருபவள்
யாரோ?
- பிழை:
சொன்னது நீதானா?
- திருத்தம்:
சொன்னவன்
நீதானா?
6. ஒரு, ஓர் -
பயன்பாடு
- ஒரு: உயிர்மெய் எழுத்தில்
தொடங்கும் சொல்லுக்கு முன் வரும் (எ.கா: க, ச, த, ப...).
- ஓர்: உயிர்
எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் வரும் (எ.கா: அ, ஆ, இ, ஈ...).
|
பிழை |
திருத்தம் |
|
ஒரு
இலை |
ஓர் இலை |
|
ஒரு
அரசன் |
ஓர் அரசன் |
|
ஒரு
ஏணி |
ஓர் ஏணி |
|
ஓர்
பரிசு |
ஒரு பரிசு |
|
ஓர் குடும்பம் |
ஒரு குடும்பம் |
|
ஓர்
வீடு |
ஒரு வீடு |
7.
இது/இஃது மற்றும் அது/அஃது
- இது, அது: வருமொழி முதலில் உயிர்மெய் எழுத்து இருந்தால் வரும்.
- இஃது, அஃது: வருமொழி முதலில் உயிர் எழுத்து (அ, ஆ...) இருந்தால் வரும்.
|
பிழை |
திருத்தம் |
|
இது
என் வீடு |
இஃது என்
வீடு |
|
அது இந்தியாவின்
பெருமை |
அஃது இந்தியாவின்
பெருமை |
|
இஃது
நமது நாடு |
இது நமது
நாடு |
|
அஃது
நல்ல மருந்து |
அது நல்ல
மருந்து |
8. பல, சில -
பயன்பாடு
'பல', 'சில' என்பவை அஃறிணைச்
சொற்கள். இவற்றை உயர்திணைப் பெயருக்கு முன் அடைமொழியாகப் பயன்படுத்தக் கூடாது.
|
பிழை |
திருத்தம் |
|
எனக்குப்
பல நண்பர்கள் உள்ளனர் |
எனக்கு
நண்பர்கள் பலர் உள்ளனர் |
|
விழாவுக்குச்
சில பெண்கள் வந்திருந்தனர் |
விழாவுக்குப்
பெண்கள் சிலர் வந்திருந்தனர் |
|
பல தலைவர்களுள்
இவரும் ஒருவர் |
தலைவர்கள்
பலருள் இவரும் ஒருவர் |
9. எதிர்மறை வினைமுற்று அட்டவணை
|
இடம் |
பால் |
ஒருமை |
பன்மை |
|
தன்மை |
- |
நான் அல்லேன் |
நாம் அல்லோம் |
|
முன்னிலை |
- |
நீ அல்லை |
நீவிர் அல்லீர் |
|
படர்க்கை |
ஆண்பால் |
அவன் அல்லன் |
- |
|
படர்க்கை |
பெண்பால் |
அவள் அல்லள் |
- |
|
படர்க்கை |
பலர்பால் |
- |
அவர் அல்லர் |
|
படர்க்கை |
ஒன்றன்பால் |
அஃது அன்று |
- |
|
படர்க்கை |
பலவின்பால் |
- |
அவை அல்ல |
10.
ஒருமை - பன்மை பிழைகள் (பிற)
'ஒவ்வொரு' பயன்பாடு: 'ஒவ்வொரு'
என்பது ஒருமையைக் குறிக்கும் சொல். எனவே, அதனோடு
வரும் பெயர்ச்சொல் ஒருமையில் இருக்க வேண்டும்.
- பிழை: ஒவ்வொரு
வீடுகளிலும் நூலகம் உள்ளது.
- திருத்தம்:
ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் உள்ளது.
கள் விகுதி:
- உயர்திணை :
பன்மைக்கு 'கள்' விகுதி அல்லது 'அர்'
விகுதி கட்டாயம். (எ.கா:
மனிதர்கள், மாணவர்கள்).
- அஃறிணை: தற்காலத்
தமிழில் 'கள்'
விகுதி கட்டாயமில்லை. (எ.கா: பத்துத் தேங்காய் -
சரி). ஆனால் எழுவாயில் பன்மை இருந்தால், வினைமுற்றில்
காட்ட வேண்டும் (பத்து மரங்கள் வீழ்ந்தன).
.png)