தமிழ் இலக்கணம் - சொல்
ஓர்
எழுத்து தனித்து நின்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தோ ஒரு பொருளை உணர்த்துவது 'சொல்' எனப்படும்.
எ.கா : கை, பூ
- இவை ஓரெழுத்து ஒருமொழி
கல்வி, மரம் - பல எழுத்துக்கள்
சொல்லின் வேறு பெயர்கள்:
- பதம்: ஒரு சொல் ஒரு பொருளைத் தருவது.
- மொழி: கருத்தை வெளிப்படுத்துவது.
- கிளவி: சொல்லப்படுவது (பேசப்படுவது).
சொல்லின் பொதுவான தன்மைகள் (பண்புகள்)
சொற்கள் பொதுவாக நான்கு
தன்மைகளைக் கொண்டிருக்கும்:
- இரு திணைகளையும் (உயர்திணை, அஃறிணை)
குறிக்கும்.
- ஐந்து பால்களையும் (ஆண்பால், பெண்பால்,
பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்) காட்டும்.
- மூன்று இடங்களிலும் (தன்மை, முன்னிலை,
படர்க்கை) வரும்.
- உலக வழக்கிலும் (பேச்சு மொழி),
செய்யுள் வழக்கிலும் (இலக்கிய மொழி) பயின்று வரும்.
- வெளிப்படையாகவும் (பொருள் நேரடியாகத்
தெரிவது), குறிப்பாகவும் (சூழ்நிலையைப் பொறுத்துப் பொருள் கொள்வது) வரும்.
நால்வகைச் சொற்கள் (இலக்கண வகை)
இலக்கண வகையில் சொல் நான்கு
வகைப்படும்.
- 1. பெயர்ச்சொல்
- 2. வினைச்சொல்
- 3. இடைச்சொல்
- 4. உரிச்சொல்
.png)